/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பு.புளியம்பட்டி கால்நடை சந்தையில்ரூ.1 கோடிக்கு ஆடு, மாடு விற்பனை
/
பு.புளியம்பட்டி கால்நடை சந்தையில்ரூ.1 கோடிக்கு ஆடு, மாடு விற்பனை
பு.புளியம்பட்டி கால்நடை சந்தையில்ரூ.1 கோடிக்கு ஆடு, மாடு விற்பனை
பு.புளியம்பட்டி கால்நடை சந்தையில்ரூ.1 கோடிக்கு ஆடு, மாடு விற்பனை
ADDED : பிப் 14, 2025 01:13 AM
பு.புளியம்பட்டி கால்நடை சந்தையில்ரூ.1 கோடிக்கு ஆடு, மாடு விற்பனை
புன்செய்புளியம்பட்டி, :புன்செய்புளியம்பட்டி கால்நடை சந்தையில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள், 1 கோடி ரூபாய்க்கு விற்பனையாகின.
ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டியில், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் கால்நடை சந்தை கூடுகிறது. இரண்டு நாட்களாக கூடிய சந்தைக்கு, 40 எருமை, 200 கலப்பின மாடு, 80 கன்று, 200 ஜெர்சி மாடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
எருமை, 18 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய், கறுப்பு வெள்ளை மாடு, 24-42 ஆயிரம் ரூபாய், ஜெர்சி, 22-48 ஆயிரம், சிந்து, 16-42 ஆயிரம், நாட்டுமாடு, 40-72 ஆயிரம் ரூபாய் வரை விற்றது. வளர்ப்பு கன்றுகள், 6,000 முதல், 15 ஆயிரம் ரூபாய் வரை விற்றன.
கர்நாடகா, கேரளா மாநில வியாபாரிகள் வாங்கிச்சென்றனர். அதேபோல், 300க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. 10 கிலோ எடை வெள்ளாடு, 7000 ரூபாய் வரை, 10 கிலோ செம்மறி ஆடு, 6,500 ரூபாய் வரையும் விற்பனையானது. அனைத்து கால்நடைகளும் ஒரு கோடி ரூபாய்க்கு விற்றதாக வியாபாரிகள்
தெரிவித்தனர்.