ADDED : ஜன 31, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிக்கிய 10 தெருநாய்கள்
ஈரோடு:ஈரோடு மாநகராட்சி 10வது வார்டு, கருவியல்பாறை வலசு, வில்லரசம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், தெருநாய்கள் கடித்து இதுவரை, 60க்கும் மேற்பட்ட ஆடுகள், ஒரு பசு மாடு, நுாற்றுக்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகள் பலியாகியுள்ளன.
இதுகுறித்து எழுந்த புகாரின் அடிப்படையில், இப்பகுதிகளில் சுற்றித்திரிந்த, 10 தெருநாய்களை, மாநகராட்சி ஊழியர்கள் நேற்று பிடித்து, சோலாரில் உள்ள கருத்தடை அறுவடை சிகிச்சை மையத்துக்கு கொண்டு சென்றனர்.