/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஹிந்து முன்னணியினர்14 பேர் அதிரடி கைது
/
ஹிந்து முன்னணியினர்14 பேர் அதிரடி கைது
ADDED : மார் 09, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹிந்து முன்னணியினர்14 பேர் அதிரடி கைது
ஈரோடு:ஹிந்து முன்னணி மாநில செயலர் மற்றும் அபிராமி அம்மன் பக்தர்கள் குழு பொறுப்பாளர் செந்தில் குமார், அபிராமி அம்மன் வழிபாட்டில் கலந்து கொள்ள, திண்டுக்கல் குங்கும காளியம்மன் கோவிலுக்கு செல்வதை தடுத்து, போலீசார் கைது செய்ததை கண்டித்து ஈரோடு மாநகர் மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில், நேற்று ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பொதுச்செயலாளர் கார்த்தி தலைமை வகித்தார். 12 ஆண்கள், இரண்டு பெண்கள் உள்ளிட்ட 14 பேரை தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததாக, போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.