/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மளிகை கடைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
/
மளிகை கடைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
ADDED : ஜன 23, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மளிகை கடைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
ஈரோடு,: ஈரோடு மாநகராட்சி, 33வது வார்டு காமராஜர் நகர் பகுதியில் உள்ள மளிகை, பெட்டி கடைகளில், நேற்று மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். அங்குள்ள பாலமுருகனுக்கு சொந்தமான மளிகை கடையில் சோதனை நடத்தினர். அங்கு விற்பனைக்கு புகையிலை பொருட்கள், 700 கிராம் இருப்பது தெரியவந்தது. புகையிலை பொருட்களை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். பாலமுருகனுக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.