ADDED : பிப் 21, 2025 12:54 AM
அ நிறம் | அளவு
சந்தை விற்பனைக்குவரத்தான 450 மாடுகள்
ஈரோடு:ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தை நேற்று நடந்தது. சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 6,000 ரூபாய் முதல், 23,000 ரூபாய் மதிப்பில், 50 கன்று, 22,000 ரூபாய் முதல், 65,000 ரூபாய் மதிப்பில், 150 எருமை, 23,000 ரூபாய் முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 200 பசு மாடுகள், 65,000 ரூபாய்க்கு மேற்பட்ட விலையில், 50க்கும் மேற்பட்ட உயர்ரக கலப்பின மாடுகளை, விவசாயிகள் கொண்டு வந்தனர். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநில விவசாயிகள், வியாபாரிகள், 90 சதவீத கால்நடைகளை வாங்கி சென்றனர்.
