/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பண்ணாரி கோவிலில் குண்டம் விழா6ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்
/
பண்ணாரி கோவிலில் குண்டம் விழா6ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்
பண்ணாரி கோவிலில் குண்டம் விழா6ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்
பண்ணாரி கோவிலில் குண்டம் விழா6ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்
ADDED : ஏப் 01, 2025 01:29 AM
பண்ணாரி கோவிலில் குண்டம் விழா6ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்
ஈரோடு:சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரியில் மாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு குண்டம் விழாவை முன்னிட்டு, கம்பம் நடும் விழா இன்று நடக்கிறது. குண்டம் விழா வரும், 7ம் தேதி நள்ளிரவு தொடங்கி, ௮ம் தேதி மாலை வரை நடக்கும். இதில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடக மாநில பக்தர்களும் பங்கேற்பர். ௫௦ ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்நிலையில் விழாவை முன்னிட்டு, வரும், 6ம் தேதி முதல் போக்குரவத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து மாவட்ட போலீசார் கூறியதாவது: ஏப்.,6ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வரும். பண்ணாரி, திம்பம், ஆசனுார் வழியாக மைசூரு செல்லும் காய்கறி மற்றும் அனைத்து வகை வாகனங்களும், சத்தியமங்கலத்தில் இருந்து வடக்குப்பேட்டை டி.புதுார் நால்ரோடு, கடம்பூர், கேர்மாளம், அரேபாளையம், ஆசனுார் வழியாக செல்ல வேண்டும்.
கர்நாடகா மாநிலத்திலிருந்து ஆசனுார், திம்பம், பண்ணாரி வழியாக கோவை, மேட்டுப்பாளையம், ஈரோடு செல்லும் காய்கறி வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வகை வாகனங்களும் ஆசனுார், அரேபாளையம், கேர்மாளம், கடம்பூர், டி.ஜி.புதுார் நால்ரோடு வழியாக மாற்று பாதையில் செல்ல வேண்டும். மைசூரில் இருந்து கர்கேகண்டி, தட்டக்கரை, பர்கூர், தாமரைக்கரை வழியாக அந்தியூர் வந்து ஈரோடு செல்லலாம். ஈரோட்டில் இருந்தும் இவ்வழியை கர்நாடகா செல்ல பயன்படுத்தலாம். போக்குவரத்து மாற்றம், 8ம் தேதி வரை அமலில் இருக்கும். பக்தர்கள் கூட்டத்தை பொறுத்து போக்குவரத்து மாற்றம் இருக்கும். இவ்வாறு கூறினர்.

