sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மண் அள்ளிய 8 பேர் கைது

மண் அள்ளிய 8 பேர் கைது

மண் அள்ளிய 8 பேர் கைது


ADDED : பிப் 21, 2025 12:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2025 12:48 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மண் அள்ளிய 8 பேர் கைது

பவானி:பவானியை அடுத்த காலிங்கராயன்பாளையம், மேட்டுநாசுவம்பாளையத்தை சேர்ந்தவர் கோபால்ராஜ், 51; இவருக்கு சொந்தமாக தேவனாங்காடு என்ற இடத்தில் ஏழு ஏக்கர் நிலத்தில் சைட் அமைத்து, நேற்று முன்தினம் மாலை சமன் செய்யும் பணி நடந்தது.

அப்பகுதியிலிருந்த மண்ணை சட்ட விரோதமாக கடத்தி செல்வதாக, சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், மண் ஏற்றி வந்த இரண்டு டிப்பர் லாரியை பிடித்தனர். போலீசார் விசாரணையில், மண் கடத்தல் உறுதியானது. இதை தொடர்ந்து, சைட்டுக்கு சென்ற போலீசார், மண் அள்ள பயன்படுத்திய இரண்டு ஜே.சி.பி., மற்றும் ஐந்து டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர்.

மேட்டுநாசுவம்பாளையத்தை சேர்ந்த கோபால்ராஜ், ஆர்.என்.புதுார் ரமேஷ், 26; எடப்பாடி சக்திவேல், 23; ராஜா, 34; சங்ககிரி கண்ணன், 50; பர்கூர், துருசனாம்பாளையம் சித்தலிங்கம், 30; ஈரோடு விக்னேஷ், 30; எலவமலை பாலாஜி, 28; ஆகிய எட்டு பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு கோர்ட்டில் எட்டு பேரையும் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us