/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
துாய்மை இந்தியா திட்டத்தில் விழிப்புணர்வு கோலம்
/
துாய்மை இந்தியா திட்டத்தில் விழிப்புணர்வு கோலம்
ADDED : செப் 18, 2024 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய் புளியம்பட்டி:
துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், புன்செய்புளியம்பட்டி நகராட்சியில் நேற்று காலை, 11:00 மணிக்கு, சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில், துாய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் நகராட்சி பணியாளர்கள்,
பொதுமக்களுடன் இணைந்து நகராட்சி பஸ் ஸ்டாண்டில் துாய்மையே சேவை-2024 என்ற தலைப்பில் விழிப்புணர்வு கோலம் வரைந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து நகராட்சி பணியாளர்கள், துப்புரவு ஊழியர்கள் பேரணி சென்றனர்.