ADDED : ஆக 21, 2024 01:46 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ண ஜெயந்தி
விழாவுக்கு அழைப்பு
ஈரோடு, ஆக. 21-
ஈரோடு மாநகர் பரிமளம் மஹாலில், இஸ்கான் அமைப்பு சார்பில், வரும், 25ம் தேதி முதல், 27ம் தேதி வரை கிருஷ்ண ஜெயந்தி விழா நடக்கிறது. இதில் உலக நன்மைக்காக, 2,000 பக்தர்கள் கலந்து கொள்ளும் கோடி ஹரிநாம யஞ்னம், கோஷ்டி பாராயணம், 26ம் தேதி மதியம், 3:00 மணி முதல் 5:00 மணி வரை நடக்கிறது. இதில் மக்கள், பக்தர்கள் கலந்து கொள்ளலாம். ஆனால், முன்பதிவு அவசியம். முன்பதிவுக்கு 91719-97703, 90957-11199 எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும். அனுமதி இலவசம். குடும்பத்துடன் அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
