ADDED : ஆக 14, 2024 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10 மற்றும் பிளஸ் ௨ பொதுத்தேர்வில் முதல் ஐந்து இடங்களை பெற்ற, மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நேற்று நடந்தது.
பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயக்குமார், தனது சொந்த நிதியிலி-ருந்து மாணவர்களுக்கு கேடயம், பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். பரிசு பெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு வேஷ்டி, சேலை, பாத்திரங்கள் வழங்கினார்.

