sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கரும்பு தோட்டத்தில் குட்டியுடன் சிறுத்தை தஞ்சம் குள்ளவீராம்பாளையத்தில் மக்கள் 'திக்திக்'

/

கரும்பு தோட்டத்தில் குட்டியுடன் சிறுத்தை தஞ்சம் குள்ளவீராம்பாளையத்தில் மக்கள் 'திக்திக்'

கரும்பு தோட்டத்தில் குட்டியுடன் சிறுத்தை தஞ்சம் குள்ளவீராம்பாளையத்தில் மக்கள் 'திக்திக்'

கரும்பு தோட்டத்தில் குட்டியுடன் சிறுத்தை தஞ்சம் குள்ளவீராம்பாளையத்தில் மக்கள் 'திக்திக்'


ADDED : பிப் 22, 2025 05:13 AM

Google News

ADDED : பிப் 22, 2025 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: வெள்ளித்திருப்பூர் அருகே செலம்பூரம்மன் கோவில், கோவிலுார் வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. ஒரு மாதத்துக்கு முன், எண்ணமங்கலம் பகுதியில் ஒரு விவசாய தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள 'சிசிடிவி' கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவானது.

இரு நாட்களுக்கு முன், குள்ளவீராம்பாளையம் பகுதியில் தங்க-ராசு என்பவரது கரும்பு தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தெரி-யவே, அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மறுநாள் வனத்துறையினர் ஆய்வு செய்தபோது, கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, கரும்பு தோட்டத்துக்கு உரமிட தங்கராசு சென்றார். அப்போது வரப்பில் குட்டியுடன் சிறுத்தை படுத்திருந்ததை கண்டு, உரத்தை அங்கேயே வீசிவிட்டு வீட்டுக்கு ஓட்டம் பிடித்தார். குட்டியுடன் கரும்புக் காட்டில் தஞ்ச-மடைந்துள்ள சிறுத்தையை பிடிக்க, அந்தியூர் வனத்துறைக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us