/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிறுத்தையை பிடிக்க இரண்டு கூண்டு ரெடி
/
சிறுத்தையை பிடிக்க இரண்டு கூண்டு ரெடி
ADDED : ஜூலை 04, 2024 07:21 AM
புன்செய் புளியம்பட்டி, : பவானிசாகர் அடுத்த கோடேபாளையத்தை சேர்ந்த சிவராஜ், 62, என்பவரது தோட்டம் விளாமுண்டி வனப்பகுதியை ஒட்டியுள்-ளது. சில நாட்களுக்கு முன்பு, இவரது தோட்டத்தில் புகுந்த சிறுத்தை மாட்டு கொட்டகையில் கட்டியிருந்த பசுமாட்டை அடித்து கொன்றது. இதையடுத்து விளாமுண்டி ரேஞ்சர் கணேஷ் பாண்டியன் தலைமையில், வனத்துறை ஊழியர்கள் ஆய்வு மேற்-கொண்டதில் சிறுத்தையின் கால் தடம் பதிவாகி இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தோட்டத்தில் கேமராக்கள் பொருத்தி சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்கா-ணித்து வந்தனர்.
இந்நிலையில், கேமராவின் பதிவுகளை ஆய்வு செய்தபோது அப்-பகுதியில், சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியானது. இதை-யடுத்து, இரண்டு இடங்களில் வனத்துறையினர் கூண்டு வைத்-தனர். கூண்டுக்குள் ஆடுகளை கட்டி வைத்துள்ளனர். ஆடுகளை வேட்டையாட வரும்போது, சிறுத்தை சிக்கிக் கொள்ளும்படி கூண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்-தனர்.