ADDED : செப் 14, 2024 02:09 AM
அ நிறம் | அளவு
சோலாரில் ஆய்வு
ஈரோடு, செப். 14-
ஈரோடு அருகே சோலாரில், மாநகராட்சிக்கு சொந்தமான, 19.69 ஏக்கர் பரப்பளவில் புது பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி, 63.50 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது. தற்போது, 90 சதவீத பணி நிறைவடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்டுமான பணியை, மாநகராட்சி ஆணையாளர் மனிஷ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். நடந்து வரும் பணிகள் குறித்த விவரம் கேட்டறிந்து, தரமாகவும், விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்.
