நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆய்வு கூட்டம்
ஈரோடு, நவ. 9-
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா முன்னிலையில் நடந்தது. இம்மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். மகளிர் உரிமை தொகை, கல்லுாரி கனவு, உயர்வுக்கு படி உட்பட அரசின் அனைத்து திட்டங்களின் செயல்பாடு, தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்து யோசனை தெரிவித்தார். எஸ்.பி., ஜவகர், கூடுதல் கலெக்டர் சதீஸ், மாநகராட்சி ஆணையர் மணீஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.