ADDED : ஜன 29, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கருத்தடை விழிப்புணர்வு
காங்கேயம்: வெள்ளகோவில் பகுதி நுாற்பாலையில், குடும்ப நலம் மற்றும் ஆண்களுக்கான கருத்தடை முறை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வெள்ளகோவில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர்கள் கதிரவன், வேல்முருகன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வளாக துாய்மை குறித்து ஆய்வு செய்து, நலக் கல்வி வழங்கப்பட்டது. புகையிலை பொருட்களை தடுப்பது குறித்து, சுகாதார ஆய்வாளர், சுகாதார மேற்பார்வையாளர் விழிப்புணர்வு ஏற்படுத்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

