நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரவுடி தற்கொலை
பெருந்துறை:சிவகங்கை மாவட்டம் சிங்கம்பிடாரியை சேர்ந்தவர் அபி ரஹ்மான், 32; பெருந்துறை, கள்ளியம்புதுார், காமாட்சியம்மன் கோவில் தெருவில் குடும்பத்துடன் தங்கி கூலி வேலை செய்தார்.
இவர் மீது பெருந்துறை போலீஸ் ஸ்டேஷனில் இரண்டு வழக்கு உள்ளது. ரவுடி பட்டியலிலும் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக பெருந்துறை, பவானி ரோட்டில் தாயார் சுல்தான் பீவி வீட்டில் தங்கி, மது குடித்து சுற்றி திரிந்தார். நேற்று முன்தினம் தாய் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.