ADDED : மார் 15, 2025 02:52 AM
அ நிறம் | அளவு
ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
தாராபுரம்:அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர் கூட்டமைப்பு சார்பில், தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே, நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
குறைந்தபட்ச பென்சன் தொகையாக, 9,௦௦௦ ரூபாய் நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கூட்டமைப்பு நிர்வாகிகள் சுப்ரமணியன், சுந்தரராசன், மாதவன் பிள்ளை உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
