ADDED : மார் 30, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழைத்தார் விழுந்துதொழிலாளி சாவு
அந்தியூர்:அந்தியூர் அருகே ஓடைமேட்டை சேர்ந்தவர் முருகன், 48, கூலி தொழிலாளி. கடந்த, 8ம் தேதி வீட்டின் அருகில் உள்ள, வாழை மரத்தில் இருந்த வாழைத்தாரை வெட்ட முயன்றார். அப்போது, வெட்டப்பட்ட வாழைத்தார், பின் கழுத்தில் விழுந்து பலத்த காயமடைந்தார்.
அவரை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அதன்பின், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.