ADDED : ஏப் 01, 2025 02:11 AM
உள்ளூர் வர்த்தக செய்திகள்
* ஈரோடு மாவட்டம் எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 22,227 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ, 52.39 முதல், 63.99 ரூபாய் வரை, 8,302 கிலோ தேங்காய், 4.௫௦ லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
* அந்தியூர் வெற்றிலை சந்தைக்கு, 5,600 கட்டு வரத்தானது. இதில் சன்ன ரகம் ஒரு கட்டு, 30 ரூபாய், பெரிய ரகம் ஒரு கட்டு, 130 ரூபாய், பீடா வெற்றிலை ஒரு கட்டு, 10 முதல் 20 ரூபாய், செங்காம்பு வெற்றிலை ஒரு கட்டு, 10 முதல் 20 ரூபாய் என, மூன்று லட்சம் ரூபாய்க்கு வெற்றிலை
விற்றது.* கோபி தாலுகா சிறுவலுார் அருகே பதிப்பாளையம் கருப்பட்டி உற்பத்தியாளர் சங்கத்தில், கருப்பட்டி ஏலம் நேற்று நடந்தது. தென்னங்கருப்பட்டி, 200 கிலோ வரத்தாகி, கிலோ 155 ரூபாய்க்கு விற்பனையானது. பனங்கருப்பட்டி, 700 கிலோ வரத்தாகி, கிலோ 180 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், தென்னங்கருப்பட்டி, கிலோவுக்கு ஐந்து ரூபாய் விலை சரிந்தது. பனங்கருப்பட்டி விலையில்
மாற்றமில்லை.

