ADDED : ஏப் 08, 2025 02:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிக்னலில் தற்காலிக பந்தல்
தாராபுரம்:தாராபுரத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தாராபுரம் பைபாஸ் சாலையில் அலங்கியம் ரவுண்டானா, உடுமலை ரவுண்டானா சிக்னல்களில், வாகன ஓட்டிகளை வெயிலின் தாக்கத்திலிருந்து காப்பாற்றும் பொருட்டு, துணியாலான தற்காலிக பந்தல்களை, போக்குவரத்து போலீசார் அமைத்துள்ளனர். இதனால் வெயிலில் வாடிய வாகன ஓட்டிகள், அந்த நிலை மாறி ரிலாக்சாக சிக்னல்களில் காத்திருக்கின்றனர்.

