நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, :மொடக்குறிச்சி சின்னியம்பாளையம் கன்னக்காட்டு மேட்டை சேர்ந்த லாரி டிரைவர் பழனிச்சாமி மகள் தேவஸ்ரீ, 17; தனியார் கல்லுாரி மாணவி.
திருச்சியை சேர்ந்த நபருடன் இன்ஸ்டாகிராமில் பழகியது தெரிந்து மகளை கண்டித்துள்ளார். கடந்த, 8ல் வீட்டில் இருந்து சென்றவர் திரும்பவில்லை. அவரது மொபைல் போனும் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது. பழனிச்சாமி புகாரின்படி மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
* அறச்சலுார் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த சுஜிவன் மனைவி சுபாஷினி, 41; ஈரோடு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரின் தாய் மேரி புகாரின்படி, அறச்சலுார் போலீசார் தேடி வருகின்றனர்.