ADDED : நவ 27, 2025 02:08 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தின் கலை, கலாச்சாரம், இலக்கியம் தொடர்பான திறனை மேம்படுத்தி உயர்த்தும் வகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.
இச்சங்கம் மூலம், 11 சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளை தேர்வு செய்து, அவர்களுக்கு தலா, 1 லட்சம் ரூபாய் நிதியுதவியை உயர்த்தி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங்கள், ஆதிதிராவிடர் நல ஆணையரகத்தில் விண்ணப்பத்தை பெறலாம். https://www.tn.gov.in/form என்ற இணைய தளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம். ஈரோடு கலெக்டர் அலுவலகம், கூடுதல் கட்டடம், 4 வது தளத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் கூடுதல் விபரம் பெறலாம்.
