ADDED : ஏப் 14, 2026 05:15 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, திண்டல் சாமுண்டி நகர் பாப்பாயம்மாள் நகரை சேர்ந்தவர் கனகராஜ், 55; தனியார் கம்பெனி ஊழியர். இவருக்கு குழந்தை இல்லை. உறவினரின் பெண் குழந்தையை தத்து எடுத்தார். அந்த குழந்தைக்கு ஒன்றரை வயதாகிறது.
கனகராஜ் தாய் லட்சுமி குழந்தையை வளர்த்தார். கடந்த, 11ல் திடீரென குழந்தையின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பல்ஸ் குறைந்து இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
