ADDED : ஏப் 18, 2026 05:49 AM
ஈரோடு, :ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான அச்சு பொருட்கள் குறித்து அச்சக உரிமையாளர்களுக்கான கூட்டம் நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்தார். தேர்தல் காலத்தில் அச்சகங்களில் அச்சிடப்படும் அனைத்து விளம்பர பொருட்களும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அச்சிடப்படும் ஒவ்வொரு போஸ்டர், பேனர், லீப்லெட், ேஹண்ட்பில் உள்ளிட்ட அனைத்து அச்சு பொருட்களிலும் அச்சக உரிமையாளர்களின் பெயர், முகவரி, வெளியீட்டாளர் விபரம் தெளிவாக குறிப்பிட வேண்டும்.உரிய அறிவிப்பு பெறாமல் எந்த ஒரு தேர்தல் தொடர்பான அச்சு பொருட்களும் அச்சிடக்கூடாது. விதிமுறைகள் மீறப்பட்டால் கடும் நடடவிக்கை எடுக்கப்படும். அச்சக உரிமையாளர்கள் அனைவரும் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை முழுமையாக கடை பிடிக்க வேண்டும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.
