ADDED : மே 13, 2026 06:25 AM
அ நிறம் | அளவு
ஈரோடுமலையம்பாளையம் அருகே பழமங்கலம், குட்டப்பாளையத்தை சேர்ந்தவர் சின்ராஜ் மனைவி ராஜாத்தி, 56. கடந்த, 17 ஆண்டுக்கு முன் சின்ராஜ் இறந்துவிட்டார். இவர்களுக்கு, 3 மகன்கள் இருந்தனர். இளைய மகன் ஜீவானந்தம் கடந்த, 6 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களது, 2 வது மகன் திருமணமாகி, தனியாக வசித்து வருகிறார்.
மூத்த மகன் குழந்தைவேல், 37, இன்னும் திருமணமாகாமல், தாயார் ராஜாத்தியுடன் வசித்து வந்தார். இவர்கள் இருவரும், கட்டட பணிகளுக்கு சென்று வந்தனர். குழந்தைவேலுக்கு குடிபழக்கம் இருந்தது.
கடந்த, 11ல் தனது பைக்கில் கடைவீதிக்கு சென்று திரும்பியபோது, மின் கம்பத்தில் மோதி படுகாயம் அடைந்தார். கொடுமுடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். மலையம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
