ADDED : மே 27, 2026 04:20 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள், 100 பேர், வெள்ளோடு பறவைகள் சரணாலயத்துக்கு நேற்று வந்தனர். அங்கு பறவைகள் கணக்கெடுப்பு, பறவைகளை பார்த்து ரசித்தனர்.
இதற்கு பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்து இருந்தது. மே மாதத்தில் ஆசிரியர்கள் புத்துணர்வு பெறும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிந்தது. ஆசிரியர்களுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவித்து விருப்பமுள்ளவர்கள் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டனர். பலர் பைனாகுலருடன் வந்திருந்தனர். சரணாலயத்தில் பறவைகளை கண்டு ரசித்தனர்.
