ADDED : பிப் 09, 2025 01:10 AM
தி.மு.க.,வுக்கு 197 தபால் ஓட்டு
ஈரோடு:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், 246, ராணுவத்தினர், 4, சிறையில் உள்ளவர், 1 என, 251 தபால் ஓட்டுக்கள் பதிவானது.
சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரியில் நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில், முதலில் தபால் ஓட்டு எண்ணப்பட்டது. இதில், தி.மு.க., சந்திரகுமார்-197, நா.த.க., சீதாலட்சுமி-13, மறுமலர்ச்சி ஜனதா கட்சி ஆனந்த் சுப்பிரமணி-2, சாமானிய மக்கள் நலக்கட்சி ப.சவிக்தா-2 ஓட்டு பெற்றனர்.
மேலும், சமாஜ்வாடி கட்சி சவுந்தர்யா, அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம் பிரபாகரன், அனைத்து ஓய்வூதியதாரர்கள் கட்சி கு.முனியப்பன், சுயேட்சைகள் அக்னி ஆழ்வார், கலையரசன், மா.சாமிநாதன், செங்குட்டுவன், கே.பத்மராஜன், என்.பாண்டியன், சி.ராஜமாணிக்கம், சே.வெண்ணிலா ஆகியோர் தலா, 1 ஓட்டும், நோட்டா-8, நிராகரிக்கப்பட்டவை-18 என பதிவாகி இருந்தது.

