/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வரும் 5 ம் தேதி சம்பளத்துடன் விடுமுறை வழங்க உத்தரவு
/
வரும் 5 ம் தேதி சம்பளத்துடன் விடுமுறை வழங்க உத்தரவு
வரும் 5 ம் தேதி சம்பளத்துடன் விடுமுறை வழங்க உத்தரவு
வரும் 5 ம் தேதி சம்பளத்துடன் விடுமுறை வழங்க உத்தரவு
ADDED : பிப் 02, 2025 01:16 AM
வரும் 5 ம் தேதி சம்பளத்துடன் விடுமுறை வழங்க உத்தரவு
ஈரோடு :ஈரோடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் வினோத்குமார் வெளியிட்ட அறிக்கை: வரும், 5 ல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள தொழிற்சாலைகள், கட்டுமானங்களில் பணிபுரியும் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓட்டுரிமை உள்ள அனைத்து தொழிலாளர்களும், ஓட்டுப்போடும் பொருட்டு, சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். இது தொடர்பாக தொழிலாளர்கள், 0424 2219521, 0424 2211780, 99943 80605, 98650 72749 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொது விடுமுறை
ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி வெளியிட்ட அறிக்கை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளான வரும், 5ல் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 100 சதவீத ஓட்டுப்பதிவுக்காக இம்மாவட்டத்தில் இயங்கும் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பொது, தனியார் நிறுவனங்கள், பீடி - சுருட்டு நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களும் அனைத்து வகை பணியாளர்களுக்கும் அன்றைய தினம் சம்பளத்துடன் விடுமுறை விடுக்க வேண்டும். விடுமுறை இல்லையென்றால், தொழிலாளர்கள் தங்கள் புகாரை, உதவி ஆணையர் கோ.ஜெயலட்சுமி - 94453 98751, துணை ஆய்வாளர் ஆர்.எஸ்.மயில்வாகன் - 98404 56912, உதவி ஆய்வாளர் பெரோஸ் அகமது - 99656 34839, அலுவலக எண்: 0424 2270090 ஆகியவற்றில் தெரிவிக்கலாம். இவ்வாறு கூறியுள்ளார்.