ADDED : பிப் 05, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூதாடிய 9 பேர் கைது
சத்தியமங்கலம் : தாளவாடி போலீசார் கரளவாடி பகுதியில் ரோந்தில் ஈடுபட்டனர். குட்டை அருகில் சூதாடிய கும்பலை சுற்றி வளைத்தனர். அதே பகுதியை சேர்ந்த சாந்தப்பா, பசுவண்ணா, சசி, மல்லன்குழி குமாரா, ரேவண்ணா, மாதேவசாமி ஆகியோரை கைது செய்து, 16,470 ரூபாயை பறிமுதல் செய்தனர். இதேபோல் அதே பகுதியில் சேவல் வைத்து சூதாட்டமாடிய திகினாரையை சேர்ந்த சிவக்குமார், ரகு, குணசேகரை கைது செய்தனர். அவர்களிடம் இரண்டு சேவலை பறிமுதல் செய்தனர்.