/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அளவீடு செய்த கோவில் நிலங்களில் எல்லைக்கல்
/
அளவீடு செய்த கோவில் நிலங்களில் எல்லைக்கல்
ADDED : ஆக 30, 2024 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அளவீடு செய்த கோவில்
நிலங்களில் எல்லைக்கல்
தாராபுரம், ஆக. 30-
தாராபுரத்தில் காடு ஸ்ரீ ஹனுமந்தராய சுவாமி கோவில், அதன் உப கோயில்களுக்கு பாத்தியப்பட்ட, 583.81 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்படும் பணி நடந்து வருகிறது. கரையூர், நத்தமேடு விநாயகர் கோவிலுக்கு சொந்தமான ஆலாம்பாளையம் கிராமத்தில், 11.83 ஏக்கர் அளவீடு செய்யப்பட்ட நிலத்தில் எல்லைக்கல் நடும் பணி நேற்று நடந்தது. இதேபோல் வீராட்சிமங்கலம், காளியம்மன் கோவிலுக்கு சொந்தமான, 3.82 ஏக்கர் நிலத்திலும் எல்லைக்கல் நடப்பட்டது. இப்பணிகளை திருப்பூர் தனி தாசில்தார் ரவீந்திரன் உள்ளிட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.