/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கீழ்பவானி பாசனத்துக்கு நீர் திறப்பு அதிகரிப்பு
/
கீழ்பவானி பாசனத்துக்கு நீர் திறப்பு அதிகரிப்பு
ADDED : ஆக 31, 2024 01:48 AM
பவானிசாகர்: பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்காலில் முதல்போக நன்செய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம், 2,000 கன அடியாக இருந்த நிலையில், 2,300 கன அடி-யாக நீர் திறப்பு நேற்று உயர்த்தப்பட்டது. அதேசமயம் காளிங்க-ராயன் பாசனத்துக்கு நீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது. நேற்-றைய நிலவரப்படி அணை நீர்வரத்து, 3,074 கன அடியாக இருந்-தது.
நீர்மட்டம், 96.83 அடி; நீர் இருப்பு, 26.3 டி.எம்.சி.,யாக இருந்-தது. அரக்கன் கோட்டை-தடப்பள்ளி பாசனத்துக்கு, 650 கன அடி தண்ணீர்; குடிநீருக்காக, 100 கன அடி நீர் என, 3,050 கன அடி வெளியேற்றப்பட்டது.