/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெருந்துறையில் ஜெ., பிறந்தநாள் விழா
/
பெருந்துறையில் ஜெ., பிறந்தநாள் விழா
ADDED : பிப் 25, 2025 06:42 AM
பெருந்துறை: பெருந்துறை சட்டசபை தொகுதி சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 77வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்-பட்டது. எம்.எல்.ஏ., ஜெயகுமார் தலைமை வகித்தார்.
பெருந்துறை ஒன்றிய செயலாளர்கள் அருள்ஜோதி செல்வராஜ், ரஞ்சித்ராஜ், விஜயன் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ. அலுவல-கத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெ., உருவப்படத்துக்கு கட்சியினர் மரியாதை செய்தனர். பிரமாண்ட ஜெயலலிதா போட்டோவை, அலங்கரிக்கப்பட்ட டிராக்டர் வாகனத்தில் வைத்து, ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று, எம்.எல்.ஏ., அலுவல-கத்தில் நிறைவடைந்தது. ஊர்வலம் தாரை தப்பட்டை முழங்க, பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், கரகாட்டம், பல்வேறு கலை-ஞர்களுடன் ஆடல் பாடலுடன் சென்றது. எம்.எல்.ஏ., அலுவல-கத்தில் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. குலுக்கல் முறையில் மூன்று நபர்களுக்கு தங்க நாணயங்கள் மற்றும் பீரோ, கிரைண்டர், மிக்ஸி, பேன் உட்பட, 77 சிறப்பு பரிசுகள், 770 பேருக்கு கூடுதல் பரிசு பொருள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., பொன்னுதுரை, நகர செய-லாளர்கள் கல்யாணசுந்தரம், பழனிசாமி, சிவசுப்பிரமணியம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அருணாச்சலம், ஒன்றிய துணை செயலாளர் அன்பரசு, பெருந்துறை யூனியன் முன்னாள் சேர்மேன் சாந்தி ஜெயராஜ், முன்னாள் துணை சேர்மேன் உமா மகேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

