ADDED : ஜூலை 29, 2024 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ம.தி.மு.க., 31வது ஆண்டு துவக்க விழாவையொட்டி, ஈரோடு மாநகராட்சியில் பல்வேறு இடங்களில், அக்கட்சியினர் கொடி-யேற்றி கொண்டாடினர். மாநகர் மாவட்ட செயலாளர் முருகன் தலைமை வகித்தார். கொள்கை விளக்க அணி செயலாளர் வந்திய-தேவன், மாநில இளைஞரணி செயலாளர் ஆசைத்தம்பி பங்கேற்-றனர்.
மாயபுரம், ஆர்.என்.புதுார், முனிசிபல் காலனி உள்ளிட்ட, 22 இடங்களில் கொடியேற்றி மக்களுக்கு இனிப்பு வழங்கினர். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.

