ADDED : மார் 08, 2024 07:21 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு மாநகரில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் மற்றும் வகையறா கோவில்களில் நடப்பாண்டு குண்டம் மற்றும் தேர்த்திருவிழா வரும், 19ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது.
இதையொட்டி மீனாட்சி சுந்தரனார் சாலையில் உள்ள, பெரிய மாரியம்மன் கோவில் வளாகத்தில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு நேற்று அதிகாலை நடந்தது. மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். தக்கார் நந்தகுமார், கோவில் செயல் அலுவலர் (பொறுப்பு) சுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
