நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: அந்தியூர் அருகே கீழ்வாணி, கல்லங்காட்டுப்புதுார், கோபாலங்-காட்டு கருப்புசாமி கோவிலில் திருப்பணிகள் முடிந்த நிலையில் கடந்த, 19ல் கும்பாபிஷேக விழா பணி தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு புதிய கருப்புசாமி, கன்னிமார் தெய்வங்களுக்கு கண் திறப்பு நடந்தது.
இந்நிலையில் நேற்று காலை கும்பாபி-ஷேக விழா நடந்தது. இதில் கீழ்வாணி, அத்தாணி, மூங்கில்-பட்டி, சென்னிமலைக்கவுண்டன் புதுார், கூத்தம்பூண்டி பகுதி-களை சேர்ந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

