sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தீர்த்தக்குட ஊர்வலம்

தீர்த்தக்குட ஊர்வலம்

தீர்த்தக்குட ஊர்வலம்


ADDED : ஏப் 01, 2025 02:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2025 02:13 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தீர்த்தக்குட ஊர்வலம்

ஈரோடு:ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கம் சார்பில், தீர்த்தக்குட ஊர்வலம் நேற்று மாலை நடந்தது. கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து தொடங்கிய ஊர்வலம், ஈஸ்வரன் கோவில் வீதி, டி.வி.எஸ்.வீதி, ப.செ.பார்க் வழியே பெரிய மாரியம்மன் கோவிலை அடைந்தது.

பக்தர்கள் குடத்தில் வேப்பிலையுடன் புனிதநீரை எடுத்து வந்து கம்பம், அம்மன் அபிஷேகத்துக்கு அளித்தனர். நில மீட்பு இயக்கத்தின் தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். துணை தலைவர் கைலாசபதி, பொருளாளர் ராஜ் கண்ணன், பொது செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தனர்.

பெரிய மாரியம்மன் கோவில் அருகே அரசு புறம்போக்கில் உள்ள, 12.66 ஏக்கரை மீட்டு ஹிந்து பக்தர்கள் மீது கரிசனம், அக்கறை கொண்டு கோவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 80 அடி சாலை திட்டத்தை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

ஊர்வலத்தில் மொடக்குறிச்சி பா.ஜ., - எம்.எல்.ஏ., சரஸ்வதி மற்றும் ஆண், பெண் பக்தர்கள், சிறுவர்-சிறுமியர், நில மீட்பு இயக்கத்தினர், ௫௦௦க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us