நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், தாராபுரத்தில் பைவ் கார்னர் பகுதியில் புதியதாக நுாலகம் கட்டப்பட்டது. தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.
இதையொட்டி தாராபுரம் நுாலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி, நகர்மன்றத் தலைவர் பாப்புகண்ணன் மற்றும் மாவட்ட நுாலக அலுவலர் ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.