ADDED : ஆக 20, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாவட்ட அரசு பள்ளிகளில், பள்ளி அளவிலான கலைத்திருவிழா தற்போது நடந்து வருகிறது.
இதன்படி ஈரோடு ப.செ.பார்க் அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான கலைத்திருவிழா, பசுமையும், பாரம்பரியமும் என்ற தலைப்பில் நேற்று நடந்தது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவிகளுக்கான கலைத்திருவிழா போட்டி இன்று நடக்கிறது. இதில் வெற்றி பெறுவோர் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர்.

