நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு, முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோபாலன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியது: தபால் துறை கோட்ட அளவிலான ஓய்வூதியர் குறை தீர் கூட்டம் வரும், 28ம் தேதி காலை, 11:00 மணிக்கு ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்க உள்ளது.
இதில் ஓய்வூதியம் சம்மந்தப்பட்ட குறைகளை நேரில் அல்லது தபாலில் வரும், 21க்குள் இந்த அலுவலகத்தில் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.