நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு பெரியசேமூர் மேற்கு வீதியை சேர்ந்த கோபால்-சரஸ்வதி தம்பதி மகள் முத்து பிரியா, 30; இவருக்கு காது கேட்காது. வாய் பேச முடியாது. கோபால் நான்காண்டுக்கு முன் இறந்து விட்டார்.
கடந்த, 8ம் தேதி வேலைக்கு சென்ற சரஸ்வதி, மாலையில் வீட்டுக்கு வந்தார். அப்போது மகளை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் தகவல் இல்லை. அவர் புகாரின்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.

