/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஒரே நாளில் 11 பேர் வேட்பு மனுத்தாக்கல்
/
ஒரே நாளில் 11 பேர் வேட்பு மனுத்தாக்கல்
ADDED : மார் 26, 2024 02:24 AM
ஈரோடு:ஈரோடு லோக்சபா தொகுதியில் போட்டியிட, தி.மு.க.,- அ.தி.மு.க., வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் என, ௧௧ பேர் மனுத்தாக்கல் செய்தனர்.
கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம், தி.மு.க., வேட்பாளரான கே.இ.பிரகாஷ், 48, மனுதாக்கல் செய்தார். இளங்கலை பொருளாதாரம் படித்துள்ளார்.
அ.தி.மு.க., சார்பில், ஆற்றல் அசோக்குமார், 54, மனுத்தாக்கல் செய்தார். பி.இ., - எம்.எஸ்., படித்துவிட்டு, தனியார் கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவர்களை தவிர சுயேட்சை வேட்பாளர்களாக திருப்பூர் மாவட்டம், தாராபுரம், எழுகாம்வலசு எஸ்.ஆனந்தி, 40; தாராபுரம், ஜோதியம்பட்டி கே.கே.வடுகநாதன், 58; ஈரோடு, பெரியசேமூர், தண்டபாணி,47; ஈரோடு, கொத்துக்காரர்தோட்டம் ஆறுமுக கண்ணன், 60; ஈரோடு, கிளாம்பாடி, புதுவட்டக்கல்வலசு மயில்சாமி, 46; நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், கலியனுார் முனுசாமி, 63; கோவை, போடி திம்மாம்பாளையம் பிரபாகரன், 37; ஈரோடு, மோளக்கவுண்டன்பாளையம் நரேந்திரநாத், 45; ஈரோடு, மாமரத்துபாளையம் சுவாதிமுத்து, 34 என ஒன்பது பேர் மனுத்தாக்கல் செய்தனர். இதுவரை ஈரோடு லோக்சபா தொகுதியில், 16 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

