/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ -இந்து குளோபல் பள்ளியில் ஏ.ஐ., சான்றிதழ் பயிற்சி படிப்பை நிறைவு செய்த 119 மாணவர்
-இந்து குளோபல் பள்ளியில் ஏ.ஐ., சான்றிதழ் பயிற்சி படிப்பை நிறைவு செய்த 119 மாணவர்
-இந்து குளோபல் பள்ளியில் ஏ.ஐ., சான்றிதழ் பயிற்சி படிப்பை நிறைவு செய்த 119 மாணவர்
ADDED : மார் 09, 2026 07:01 AM

அ நிறம் | அளவு
ஈரோடு; ஈரோடு, மாமரத்துப்பாளையம் இந்து கல்வி நிலையம் மற்றும் இந்து குளோபல் பள்ளியில் 'கூகுள் ஜெமினி ஏஐ' சான்றிதழ் பயிற்சி படிப்பை நிறைவு செய்த, 119 மாணவ, -மாணவியர் சான்-றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சிக்கு இந்து குளோபல் பள்ளி நிறுவனர் அருண்குமார் பாலுசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். நவீன ஏ.ஐ., பயிற்சியை வெற்றிகர-மாக முடித்த இரண்டு பள்ளிகளையும் சேர்ந்த, 119 மாணவ, -மாணவியருக்கு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். பள்ளி முன்னாள் மாணவர் ஹரீஷ் மற்றும் அவரது குழுவினரின் பயிற்சி, இரு பள்-ளிகளின் கணினி அறிவியல் துறை ஆசிரியர்-களின் தீவிர முயற்சியுடனும் இத் திட்டம் சிறப்-பாக செயல்படுத்தப்பட்டது. பள்ளி அளவிலான ஏ.ஐ., கல்வியறிவில், ஈரோடு மாவட்டம் முன்-னிலை பெற்றுள்ளதாக பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
