ADDED : ஏப் 09, 2024 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு;ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதியில், 2,222 ஓட்டுச்சாவடிகளில், 10,970 பேர் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர்.
இவர்களுக்கு அந்தந்த தொகுதியில் நேற்று முன்தினம், 2ம் கட்ட பயிற்சி வழங்கப்பட்டது. அப்போது அவர்களுக்கு தபால் ஓட்டுக்கான படிவம், ஓட்டுச்சீட்டும் வழங்கினர். இதன்படி லோக்சபா தொகுதி வாரியாக ஓட்டுக்களை பதிவு செய்தனர். இதில் ஈரோடு தொகுதிக்கு, 553 தபால் ஓட்டு; திருப்பூர் தொகுதிக்கு, 694 ஓட்டு; நீலகிரி தொகுதிக்கு, 215 ஓட்டு; விருதுநகர் தொகுதிக்கு ஆறு ஓட்டும் பதிவானது. இதன்படி பதிவான, 1,468 ஓட்டுக்களும், ஈரோடு கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.

