/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கிலோ ரூ.187ஐ தொட்ட கொப்பரை இதுவரை இல்லாத வகையில் உச்சம்
/
கிலோ ரூ.187ஐ தொட்ட கொப்பரை இதுவரை இல்லாத வகையில் உச்சம்
கிலோ ரூ.187ஐ தொட்ட கொப்பரை இதுவரை இல்லாத வகையில் உச்சம்
கிலோ ரூ.187ஐ தொட்ட கொப்பரை இதுவரை இல்லாத வகையில் உச்சம்
ADDED : ஏப் 04, 2025 01:20 AM
கிலோ ரூ.187ஐ தொட்ட கொப்பரை இதுவரை இல்லாத வகையில் உச்சம்
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் முதல் முறையாக ஒரு கிலோ கொப்பரை, 187 ரூபாயை தொட்டது. ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை கூட்டுறவு விற்பனை சங்கம், எழுமாத்துார், மொடக்குறிச்சி, அவல்பூந்துறை, கொடுமுடி மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளகோவில், காங்கேயம் உட்பட பல ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள், தனியார் மண்டிகளில் கொப்பரை தேங்காய் அதிகம் விற்கிறது. இதுவரை இல்லாத வகையில் நேற்று முன்தினம் ஒரு கிலோ, 187 ரூபாயை கடந்தது.
இதுகுறித்து கூட்டுறவு விற்பனை சங்க அதிகாரிகள் கூறியதாவது: கொப்பரை கடந்த, 2018ல் அதிகபட்சமாக, 147 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் பெருந்துறை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் முதல் தரம் கிலோ, 154 ரூபாய் முதல் 187.18 ரூபாய், இரண்டாம் ரகம், 32 ரூபாய் முதல் 182.49 ரூபாய், அன்சல்பர் கொப்பரை, 163189.43 ரூபாய்க்கும் ஏலம்
போயுள்ளது. இதேபோல் மொடக்குறிச்சி உப ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் முதல் தரம் கிலோ, 172.60 181.99 ரூபாய்க்கு விற்பனையானது. ஏப்., முதல் அக்., வரை தேங்காய், கொப்பரை தேங்காய் சீசன். அடுத்த, 15 நாட்களில் காய் வரத்து அதிகரிக்கும்போது விலை குறையும் என வியாபாரிகள் கருதுகின்றனர். இவ்வாறு கூறினர்.
கொப்பரை தேங்காய் விலை உச்சம் தொட்டாலும், தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதல் அதிகரித்து, 100 காய் பிடிக்க வேண்டிய இடத்தில், 10 காய் மட்டுமே பிடிக்கிறது. இதனால் வெள்ளை ஈ நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் துறை உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

