ADDED : ஜூலை 17, 2024 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்;தாராபுரத்தை
அடுத்த அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் பழனி, 70; இவர் தோட்டத்தில்
கட்டப்பட்டிருந்த இரு கறவை மாடுகள், கடந்த மாதம் திருட்டு போனது. பழனி
புகாரின்படி அலங்கியம் போலீசார், களவாணிகளை தேடி வந்தனர்.
இது
தொடர்பாக தாராபுரம், சென்னாக்கல்பாளையம் சுதாகர், 29;
தளவாய்பட்டினம் ராஜா, 34, ஆகியோரை கைது செய்தனர். மாடுகளை திருடி
கோவையில் விற்றதை ஒப்புக் கொண்டனர். இருவரையும் கைது செய்த போலீசார்,
மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி, கோவை சிறையில் அடைத்தனர்.