/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பட்டறை ஓனர் வீட்டில் திருடிய ௨ பேர் கைது
/
பட்டறை ஓனர் வீட்டில் திருடிய ௨ பேர் கைது
ADDED : ஜூலை 26, 2024 02:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயம் அருகே வீரணம்பாளையம் ஊராட்சி அர்த்தநாரிபா-ளையத்தை சேர்ந்தவர் தங்கவேலு, 48; காங்கேயத்தில் டூவீலர் பட்டறை வைத்துள்ளார்.
கடந்த ஆண்டு நவ.,௩ம் தேதி இவரது வீட்டில், 11 பவுன் தங்க நகை திருட்டு போனது. களவாணிகளை காங்கேயம் போலீசார் தேடி வந்தனர். இதில் ஈடுபட்ட திருப்பூர், வீரபாண்டி, ஏ.பி.நகர் விக்னேஷ், 28; கன்னியாகுமரி, நெய்யூர், காட்டுவிளை ஸ்டீபன், 38, ஆகியோரை, போலீசார் கைது செய்-தனர். காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.