ADDED : அக் 20, 2024 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
2,000 டன் நெல் வரத்து
ஈரோடு, அக். 20-
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், பொது வினியோக திட்டத்துக்காக, தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
இதில் நேற்று முதற்கட்டமாக, 2,000 டன் நெல், தனி சரக்கு ரயிலாக ஈரோடு வந்தது. ஈரோடு ரயில்வே கூட்ஸ் செட்டில் நுாற்றுக்கணக்கான லாரிகளில் ஏற்றி, அரசின் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைத்தனர். அரவை முகவர்களிடம் வழங்கி, புழுங்கல் அரிசியாக மாற்றி, மாவட்டத்தில் உள்ள பொது வினியோக திட்ட குடோன்களுக்கு அனுப்பி, ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வினியோகிக்கப்படும்.