ADDED : மார் 25, 2025 12:54 AM
அ நிறம் | அளவு
அனைத்து பஞ்.,களிலும்29ல் கிராமசபை கூட்டம்
ஈரோடு:உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பஞ்.,களிலும் வரும், 29ம் தேதி கிராமசபை கூட்டம் நடக்கவுள்ளது. கூட்டம் நடக்கும் இடம், நேரம் ஆகியவற்றை அந்தந்த பஞ்., நிர்வாகம் அறிவிக்கும். உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளை பற்றி விவாதித்தல், பஞ்., நிர்வாக பொது நிதி செலவினம், தணிக்கை அறிக்கையை பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறுதல், குடிநீர் வினியோகத்தை உறுதி செய்தல் குறித்து கிராமசபை கூட்டம் நடக்கும்.
