ADDED : மார் 18, 2025 01:33 AM
அ நிறம் | அளவு
குறைதீர் கூட்டத்தில்420 மனுக்கள் ஏற்பு
ஈரோடு:ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் டி.ஆர்.ஓ., சாந்தகுமார் தலைமையில் நடந்தது. பட்டா மாறுதல், மகளிர் உரிமைத்தொகை, ரேஷன் கார்டு பெறுதல் என்பது உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 480 மனுக்கள் பெறப்பட்டன. அந்தந்த துறை விசாரணைக்காக மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி, பயிற்சி துணை கலெக்டர் சிவபிரகாசம் உட்பட பலர் மனுக்களை பெற்றனர்.
