/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பட்டுக்கூடு 58 கிலோ ரூ.40,000க்கு விற்பனை
/
பட்டுக்கூடு 58 கிலோ ரூ.40,000க்கு விற்பனை
ADDED : மார் 16, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்டுக்கூடு 58 கிலோ ரூ.40,000க்கு விற்பனை
ராசிபுரம்:ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு, தினசரி பட்டுக்கூடு விற்பனை நடக்கிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 58 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 720 ரூபாய், குறைந்தபட்சம், 696 ரூபாய், சராசரி, 697 ரூபாய் என, 58 கிலோ பட்டுக்கூடு, 40,000 ரூபாய்க்கு விற்பனையானது.